தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாளருக்கு கடும் கட்டுப்பாட்டை தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு இயக்ககம்
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்னும் 3 நாட்களில் (மார்ச் 13) துவங்க உள்ளதால் பல்வேறு நடவடிக்கைகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கண்காணிப்பு பணிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு மாணவர்களின் வருகைப்பதிவுகளை ஆன்லைனில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதைத்தொடர்ந்து 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் வெளியாவதை தடுக்க மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது. அதன்படி தேர்வு மையத்திற்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு செல்ல தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இதையடுத்து தேர்வுத்துறை தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருவதால் கண்காணிப்பு ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.