ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த பப்ஜி – சைபர் கிரைம் போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

0
ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த பப்ஜி மதன் - சைபர் கிரைம் போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!
ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த பப்ஜி மதன் - சைபர் கிரைம் போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

ஆன்லைன் விளையாட்டான பப்ஜியில், ஆபாசமாக பேசி விளையாடியதாக கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு குறித்து, சைபர் கிரைம் போலீசார் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு:

தடை செய்யப்பட்ட ஆன்லைன் பப்ஜி விளையாட்டை ஆபாசமாக விளையாடிய புகாரில், பப்ஜி மதன் கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் மதனை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் ஜூலை 5ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில், கடந்த வாரம் இவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பப்ஜி மதனை எதுக்கு வெளியில் விடணும் - விசாரணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அதிரடி!!

இதையடுத்து இவர் ஜாமீன் கோரிய வழக்கை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இவர் மீண்டும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பப்ஜி மதன் மீதான ஜாமீன் வழக்கு குறித்து சைபர் கிரைம் போலீசார் 10 நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here