Friday, April 26, 2024

பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது – இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!!

Must Read

இஸ்ரோ இன்று 1,410 கிலோ எடையுடைய சிஎம்எஸ் 01 என்ற செயற்கைக்கோளோடு பிஎஸ்எல்வி சி 49 என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தரவுகளை பெறுவதற்காக இந்த ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் புதிய முயற்சி:

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் தான் பணிகள் ஆரம்பித்த நிலையில், நவம்பர் 7 ஆம் தேதி பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து, இஸ்ரோ ஆய்வு நிறுவனம் 1,410 கிலோ எடையுடைய சிஎம்எஸ் 01 செயற்கைகோள் ஒன்றை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைகோள் பிஎஸ்எல்வி சி 49 என்ற ராக்கெட்டோடு நேற்று 25 மணி நேர கவுன்ட்டவுனை ஆரம்பித்தது. 3.41 மணி அளவில் ராக்கெட்டை விண்ணில் ஏவ தயாராக இருந்தது.

சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம்?? ரக்சனா? ஹேமந்தா? தொடரும் மர்மம்!!

குறித்த நேரத்தில் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. இந்த ராக்கெட் கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி பாண்ட் ஆகிய பணிகளுக்கு தேவையான தரவுகளை வழங்குவற்காக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதன் மூலமாக கிடைக்கும் அலைவரிசையினை வைத்து அந்தமான் நிகோபார், லட்ச தீவுகள் மற்றும் இந்தியாவில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று விண்வெளி விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -