மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 30 சதவீதமாக உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் வங்கி ஊழியர்களும் அடங்குவர். இவர்களுக்கு அகவிலைப்படி, பயணப்படி, HRA, மருத்துவ செலவு கொடுப்பனவு போன்ற பல்வேறு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் இவ்வாறு பணிபுரியும் அரசு ஊழியர்கள் அந்த பணியில் இருந்து ஓய்வு பெறும்போதும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அரசு வங்கி ஊழியர்கள் ஓய்வூதியம் 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதனால் அவர்களின் ஓய்வூதியம் ரூ.30000 திலிருந்து ரூ.35000 ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஓய்வூதிய சதவீதம் 15 லிருந்து 20 ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது இது 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்