முதல்வர் தன் வாக்குப்படி, உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு, 1 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி:
‘கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு, சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வுகள் வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, தமிழக அரசு, 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். அதன் படி அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., அரசு, இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தபோது, 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
எதிர்கட்சியில் இருக்கும்போது கூறிவிட்டு ஆளும் கட்சியாக மாறியபின்பு மாற்றி பேசுவது அழகில்லை எனவும் கூறி திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார். ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
எனவே முதல்வர் தன் வாக்குப்படி, உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு, 1 கோடி ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலையும் வழங்கி உத்தரவிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.