பொதுமக்களுக்கு தேவையான கட்டமைப்பு, தெரு விளக்கு, பராமரித்தல் போன்ற பொதுப்பணிகளை மேற்கொள்ள அரசு சொத்துவரி வசூல் செய்து வருகிறது. அந்த வகையில் அரசு நிர்ணயித்த சொத்து சீராய்வு வரியை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதனால் சொத்து வரி நிலவரங்களை தெளிவு படுத்தவே மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் 15 நாட்களுக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்குவதாகவும் கூறியிருந்தது.
அதன்படி உரிமையாளர்கள் எளிய முறையில் பணம் செலுத்த தபால், இ-சேவை, ஆன்லைன், கியூ ஆர் என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே 2022-23ம் நிதியாண்டு முடிவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் சொத்துவரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.