தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் பெரும்பாலானோர் குளிர் நிறைந்த சுற்றுலா தளங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் பல சுற்றுலா தளங்களை கொண்ட தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் அரிக்கொம்பன் என்ற யானை காட்டிற்குள் இருந்து பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கடந்த இரண்டு தினமாக சுற்றி வரும் யானையை காட்டிற்குள் திருப்பி அனுப்ப வனத்துறையினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் சுருளிப்பட்டி பகுதியில் அரிக்கொம்பன் புகுந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை யானை சேதப்படுத்தியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.