பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர்மஹாலக்ஷ்மியை திருமணம் கொண்ட நிலையில் பலரின் பேச்சுக்கு ஆளாகி வருகிறார். இந்த சம்பவம் குறித்து தான் யூடியூப் முழுக்க பேச்சு. வனிதாவின் திருமணத்தை அந்த அளவிற்கு விமர்சித்து விட்டு நீங்க செய்றது மட்டும் சரியா?? என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
ஆனாலும் ரவீந்தர் அதற்கும் ஒரு பதிலை சொல்லி மக்களின் வாயை அடைத்தார். மேலும் மஹாலக்ஷ்மி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்துள்ளார் என்றும் பேசப்பட்டது. ஆனால் மஹாலக்ஷ்மி நான் உண்மையான காதலுடன் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன், இதை யாருக்கும் நிரூபிக்கணும்னு தேவையில்லை என்று இன்டெர்வியூவில் கூறியிருந்தார்.
இப்படி இருக்க ரவீந்தர் இப்பொழுது மீண்டும் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது திருமணத்தை ஓடிடியில் ரிலீஸ் பண்ணி காசு பார்த்தவங்கள விட என் கல்யாணத்தை விமர்சனம் செஞ்சு காசு பார்த்தவங்க ஜாஸ்தி. ஒரு கல்யாணம் பண்ணது குத்தமா?? என்று பேட்டியளித்துள்ளார் ரவீந்தர். இதற்கு நெட்டிசன்கள் பலரும் இவருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
நல்ல பெயர் சம்பாதிக்க கட்டுக்கதையை பரப்பும் விஜய் தேவரகொண்டா?? வெளிவந்த உண்மை சம்பவம்!!
அதாவது நீங்க இன்டெர்வியூ கொடுக்க போய் தானே எல்லா விமர்சனமும் வந்துச்சு. கல்யாணத்தை வச்சு பணம் பாக்குறாங்கனு சொல்ற நீங்க தானே அந்த இன்டெர்வியூவிற்கு போகாம இருந்து இருக்கணும் என்று விளாசி வருகின்றனர்.