காலம் காலமாக நம் முன்னோர்கள் எதை செய்ய வேண்டும், செய்ய கூடாது என பல பழக்கவழக்கங்களை நமக்கு சொல்லி கொடுத்துள்ளனர். ஆனால் நாம் வளர்ந்து வரும் நாகரீகத்தால் சாஸ்திர, சம்பிரதாயத்தை பின்பற்றுவது கிடையாது. ஆனால் இப்போது வீட்டில் தரித்திரம், பண கஷ்டம், பிரச்சனை போன்றவை வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் வீட்டில் சமையல் செய்யும் போது தங்களுடைய கவனக் குறைவால் அடிபிடிப்பது வழக்கம். ஆனால் இதை நாம் எதார்த்தமான ஒன்றாக தான் இத்தனை நாள் நினைத்துக் கொண்டுள்ளோம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனால் இப்போது வீட்டில் சமைக்கும் போது அடி பிடித்தால் அளவுக்கு மீறிய தரித்திரமும், பணக்கஷ்டமும் வரும். மேலும் அப்படி அடிப்பிடித்த உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு தீராத நோய்கள் கூட ஏற்படலாம். இதனால் சமைக்கும் போது பெண்கள் கவனமுடன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேலும் கவனக்குறைவால் இனி சமைக்கும் போது அடி பிடிக்காமல் இருந்தால் தேடி வரும் துன்பங்கள் கூட விலகி விடும். அடுத்த விஷயம் என்னவென்று பார்த்தால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அழகுக்காக தங்களுடைய முடிகளை விதவிதமாக வெட்டி கொள்கின்றனர்.
அடடா.., கவர்ச்சியில் கொப்பளிக்கிறேறீங்களே ரேஷ்மா.., மொத்தத்தையும் பார்த்து கிறங்கிய இளசுகள்!!
ஆனால் அப்படி வெட்டும் முடி எக்காரணத்தைக் கொண்டும் தீயில் படக்கூடாது. அதேபோன்றுதான் ஆண்களுக்கும். ஆனால் சிலர் தங்களது அறியாமையால் முடியை வெட்டி எரிப்பது போன்ற அசால்ட்டான வேலைகளை செய்கின்றன. ஆனால் இப்படி செய்வது மிகவும் தவறு. ஏனென்றால் முடி தீயில் கருகும் போது வெளிவரும் வாசனையாய் மனிதனுக்கு பல்வேறு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அது மட்டும் அல்லாமல் ஆன்மீக ரீதியாக பார்த்தால் அந்த வாசனையை நுகரும் போது வீட்டில் தரித்திரம் உண்டாகும்.
இதனால் தான் நம் முன்னோர்கள் கூட பொருட்களை எரிக்கும் போது வரும் வாசனையை நுகர கூடாது என எச்சரித்துள்ளனர். இது தவிர நகத்தை வெட்டி தீயில் போடுவது, கையில் வைத்து விளையாடுவது போன்ற செயல்களை மறந்தும் கூட செய்யக்கூடாது. இது போன்று வீட்டிற்கு ஆகாத வேலைகளை செய்தால் குடும்பத்தில் மீள முடியாத வறுமை ஏற்படும். இதனால் குடும்பத்தின் நலனுக்காக இது போன்ற செயல்களை மறந்தும் செய்யாமல் இருப்பது நம் உடலுக்கும், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் மிகவும் நன்று.