புரோ கபடி லீக் தொடரில், எந்தெந்த அணிகளுக்கு காலிறுதியில் நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து இப்பதிவில் காணலாம்.
புரோ கபடி:
புரோ கபடி லீக் தொடரின் 9 வது சீசன் பெங்களூர், புனே மற்றும் ஹைதரபாத் உள்ளிட்ட நகரங்ககளில் மூன்று கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கு பெற்றுள்ள 12 அணிகளும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா இருமுறை லீக் சுற்றுகள் போல் போட்டியிட்டு வருகின்றன. இதன், இறுதி கட்ட லீக் சுற்றுகள் அனைத்தும், தற்போது ஹைதரபாத்தில் நடைபெறுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த லீக் சுற்றுகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் ஆறு இடங்களை பிடிக்கும் அணிகளை காலிறுதிக்கு முன்னேறும். தற்போது இந்த பட்டியலில், 19 போட்டிகளில் விளையாடி உள்ள ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 69, புனேரி பல்டன் 69, பெங்களூரு புல்ஸ் 63 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இதனை தொடர்ந்து, UP யோதாஸ் 60, தமிழ் தலைவாஸ் 56, தபாங் டெல்லி 54 புள்ளிகளுடன் 4, 5 மற்றும் 6 வது இடத்தில் உள்ளனர்.
ஜெயித்தும் உலக கோப்பையில் இருந்து வெளியேறிய ஜெர்மனி…, அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜெர்மனி!!
இந்த லீக் சுற்றில், இன்னும் அனைத்து அணிகளும் 2 போட்டிகள் விளையாட வேண்டி உள்ளது. இந்த 2 போட்டிகளிலும், மேற்கூறிய அணிகள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால், இதே நிலையை தொடர்வதுடன் காலிறுதிக்கும் முன்னேறும். ஆனால், வெற்றி பெற தவறினால், இந்த புள்ளிப் பட்டியலில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.