பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா ‘தமிழன்’ என்ற தமிழ்ப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இவரை ஒரு நடிகையாக அறிமுகப்படுத்தியது தமிழ் சினிமா என்றாலும், பெரும்பாலும் அவர் ஹிந்தி சினிமாக்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
அந்த வகையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ப்ரியங்கா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் மகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். நடிகை ப்ரியங்கா பாலிவுட்டில் நடித்து வந்த போது சில நடிகர்களை காதலித்ததும், அவர்களுடன் டேட்டிங் செய்தததும் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில், ஷாஹித் கபூர், ஹர்மான் பவேஜா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் உடனான காதல் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் நடிகை ப்ரியங்கா.
தீவிர உடற்பயிற்சியில் நடிகர் சூர்யா…..,ஒருவேளை அதுக்காக இருக்குமோ…,
இது குறித்து அவர் கூறுகையில், ‘எனது முன்னாள் காதலர்கள் அனைவரும் ஆளுமை மிக்கவர்கள். எனது காதல், தோல்வி அடைந்ததற்கான காரணம் கருத்து வேறுபாடு தான். நாங்கள் அந்த உறவில் இருந்து பிரிவதற்கு முன்பு, அதனை சரி செய்ய முயற்சித்தேன். ஆனால், அவை தோல்வியில் தான் முடிந்தது. இருந்தாலும், எனது முன்னாள் காதலர்கள் அனைவரும் அற்புதமானவர்கள் தான்’ என்று பேசியுள்ளார்.