விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா சோப்ரா – வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!

0
 2வது குழந்தைக்கு தயாரான நடிகை பிரியங்கா சோப்ரா - இதையும் இந்த முறையிலேயே பெற திட்டம்!!

பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து அவரது காதலன் பெயர் நீக்கப்பட்டதால் இருவருக்கும் விவாகரத்து ஆக போகிறது என்று வதந்தி பரவி கொண்டிருந்தது. அதற்கு தற்போது பிரியங்கா சோப்ரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி

பிரியங்கா சோப்ரா விஜய்யுடன் இணைந்து நடித்த ”தமிழன்”’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாத்துறையில் நுழைந்தார். 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் தன்னை விட 10 வயது சிரியவரான நிக் ஜோனாஸை என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பு பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் என்று தனது காதலன் பெயரையும் இணைந்து வைத்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா சோப்ரா ஜோனஸ் என்ற பெயரை பிரியங்கா என மாற்றம் செய்துள்ளார். இதனை கவனித்த பலரும் இருவரும் பிரிய உள்ளனர் என்று வதந்திகளை பரப்ப துவங்கினர். இது குறித்த வதந்திகள் பரவி கொண்டிருந்த நிலையிலும் இருவரின் தரப்பில் இருந்தும் எந்த விதமான அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.

தற்போது பிரியங்கா சோப்ரா இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எனது இன்ஸ்டாகிராம் பயனர் பெயர் டிவீட்டர் பக்கத்தோடு பொருந்த வேண்டும் என்பதற்காகவே மாற்றம் செய்தேன். பெயர் மாற்றம் செய்ததை வைத்து யாரும் இந்த மாதிரியான தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று ஒரு பேட்டியில் கேட்டு கொண்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here