பிரியாமணி தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்தவர். இவர் சூர்யாவின் தம்பி கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். இந்த படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் கிராம பெண்ணாக நடித்து புகழ்பெற்றவர். இந்நிலையில் இவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அமீர் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த பருத்திவீரன் படத்தில் தான் பிரியாமணி முதன் முதலாக தமிழ் திரையில் கால் பதித்தார். கிராமத்து பெண்ணிற்கான தைரியம், துணிச்சல்,பேச்சு என அந்த கதாபாத்திரத்தை அப்படியே உரித்து வைத்து இருந்தார். அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தார். அதற்கு பின் அவர் மற்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.
மேலும் இவர் 2017-ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தனது மார்க்கெட் குறையாமல் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஹிந்தியில் நடித்த தி பேமிலி மேன் 2 எனும் வெப் சீரிஸ் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தனது கணவருடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
Facebook =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!