ஓரக்கண்ணால் உசுப்பேத்தும் பிரியா பவானி சங்கர்…!கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

0

சின்னத்திரை நடிகைகள் பலர் வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர். அந்த மாதிரியான ஒரு நடிகை தான் பிரியா பவானி சங்கர். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் நீல நிற  சட்டை அணிந்து கொண்டு ஓரக்கண் பார்வையால் ரசிகர்களை கிக்கெதி உள்ளார்.

செய்தி வாசிப்பாளராக புதிய தலைமுறை  டிவியின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நாயகியாக மாறினார். சின்னத்திரையில் நடிக்கும் போதே அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் வர தொடங்கியது.அதன் மூலம் வெள்ளித்திரையில் களம் கண்டார்.

இவ்வாறு அவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்த படம் மேயாத மான் படம். அதை தொடர்ந்து பல படங்களில் கமிட்டானார். ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும்,சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மேலும் இவர்  பல படங்களை தனது கைவசம் வைத்து கொண்டு லேடி சூப்பர் ஸ்டாருக்கு சவால் விடும்  வகையில் வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் சில முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது ஜெயம் ரவியின் புதிய படத்திலும், இதையடுத்து தனுஷின் புதிய படத்தில் ராசி கண்ணா உடன் சேர்ந்து இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ஓரக்கண் பார்வையில் சிரித்தபடி உள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here