தமிழ் சினி உலகில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் செய்த கொழுக்கட்டையை சாப்பிடுவது போல உள்ளார்.
சின்னத்திரை மூலம் தனது முகத்தை சினிமா உலகிற்கு காட்டியவர். சின்னத்திரை சீரியல்களில் நடித்து கொண்டிருக்கும் போதே திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது. அந்த வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்தி மேயாத மான் என்ற படத்தின் மூலம் தன்னுடைய வெள்ளித்திரை பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் அம்மணி காட்டில் மழை தான்.
அதாவது அதன் பின்னர் வரிசையாக அவரை தேடி பட வாய்ப்புகள் வர தொடங்கியது. கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும் பல படங்களை கைவசம் வைத்து கொண்டு தமிழ் திரையில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு வருகிறார். இவரின் இந்த அசுர வளர்ச்சி முன்னணி நடிகைகள் மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் பிரியா பவானி சங்கர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு வீட்டில் செய்யப்பட்ட கொழுக்கட்டையை சாப்பிடுவது போல உள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அவரின் இந்த புகைப்படம் லட்ச கணக்கில் லைக்ஸ்களை பெற்று வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்