தமிழகத்தின் முக்கிய பகுதியில் நாளை நடக்க இருக்கும் வேலை வாய்ப்பு முகாம் குறித்து முக்கிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே வேலை தேடுவதில் மும்மரமாக இருந்து வருகிறார்கள். என்னதான், தொழில் வளர்ச்சியில் மாற்றங்கள் வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லா பட்டதாரிகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி வேலை இல்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கத்தில் ஒன்று தான்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் தேனி மாவட்டத்தில் நடக்க இருக்கும் வேலை வாய்ப்பு முகாம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தேனி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நவம்பர் 11ஆம் தேதியான நாளை காலை 10 மணி அளவில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கின்றனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு முதல் டிகிரி முடித்த அனைவரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்கள் “certificate”களை எடுத்து வருமாறு தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் ஏராளமானோர் பயடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது