தற்போதைய காலகட்டத்தில் பட்ட படிப்பை முடித்துவிட்டு ஏகப்பட்ட இளைஞர்கள் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். அவர்களுக்காகவே அரசாங்கம் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் பல தனியார் நிறுவன பிரதிநிதிகள் நடத்தி வரும் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதால், அரசாங்கம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல நிறுவனங்கள் பங்கேற்று தேவையானோரைத் தோ்வு செய்யவுள்ளனா்.
ஓய்வூதிய திட்டம்., அரசு ஊழியர்களுக்கு 12 சதவீதம் வரை வருமானம்., வெளியான முக்கிய தகவல்!!!
மேலும் இந்த முகாமில் 10, 12, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநர், கணினி பயிற்சி கல்வி தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் சுயவிவரம், கல்விச் சான்றுகளுடன் வெள்ளிக்கிழமை நேரில் வரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 0461-2340159 என்ற எண்ணில் வாயிலாகவோ அல்லது அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.