தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் 2வது மற்றும் 3 வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதன்படி நாளை மறுநாள் (மே 19) திருவண்ணாமலை மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ள இம்முகாமில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, எஞ்சினியரிங், ஐடிஐ, பாலிடெக்னிக் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்க இருப்பதால் ஆதார், புகைப்படம் உள்ளிட்ட உரிய ஆவணங்களை எடுத்து கொண்டு வர அறிவுறுத்தி உள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு 04175-233381 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
முதல் முதலாக விவாகரத்து குறித்து பேசிய சுகன்யா., இவங்க வாழ்க்கைல இவ்வளவு சோகம் நடந்துருக்கா!!
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மறுநாள் (மே 19) காலை 10.30 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் “தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெற உள்ளது. இம்முகாமில் குறைந்தபட்சம் 8 ம் வகுப்பு கல்வித் தகுதிகளை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் வேலை தேடுபவர்களும், வேலை வழங்குபவர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சுய விவரங்களை பதிவு செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.