தமிழகத்தை சேர்ந்த மாணவி வினிஷா பிரிட்டனில் நடைபெறும் விழாவில் சுற்றுசுழலலுக்கான எர்த்ஷார்ட் விருதை பெற உள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஏர்த்ஷார்ட் விருது:
பிரிட்டன் நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சுற்றுசூழல் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமான ஒன்று. இதில், தற்போது நடைபெறவுள்ள மாநாட்டில் இந்தியாவை, அதுவும் தமிழ்நாட்டை சார்ந்த மாணவி பெருமைப்படுத்தபட உள்ளார்.
அதாவது, தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி வினிஷா என்ற பெண் இந்த சிறப்பு அங்கீகாரத்தை பெற உள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த பெண் சுற்றுசூழலை மாசுபடுத்தாத சூரிய ஒளியில் இயங்கக்கூடிய சோலார் சலவை பெட்டியை தயாரித்துள்ளார். இந்த தயாரிப்பை பெருமை படுத்த இவர் பிரிட்டன் அரசின் எர்த்ஷார்ட் என்ற விருதை பெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல், இந்த விருது பிரிட்டன் இளவரசர் வில்லியம்சனின் பெயரில் “வில்லியம்சன் எர்த்ஷார்ட்” என்ற பெயரால் வழங்கப்படுகிறது. சிறுமியின் இந்த கண்டுபிடிப்புக்கு பிரிட்டன் அரசு அங்கீகாரம் அளித்திருப்பது சிறப்பு வாய்ந்த செயலாக பார்க்கப்படுகிறது.