ஏலம் விடப்பட்ட இளவரசி டயானாவின் போர்டு கார்.. போட்டி போட்டுக் கொண்டு வாங்கிய அருங்காட்சியகம்!!!

0

இளவரசர் சார்லஸ், டயானாவுக்கு பரிசளித்த போர்டு கார் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 51.4 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஒரு தென் அமெரிக்க அருங்காட்சியகம் இந்த காரை ஏலம் மூலம் வாங்கியுள்ளது.

டயானா, இவர் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகனான வேல்ஸ் இளவரசர் சார்லஸின் முன்னாள் மனைவி ஆவர். இவர்கள் இருவருக்கும் வில்லியம் மற்றும் ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர். பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். கணவர் சார்லஸ் உடனான பிரிவிற்கு பிறகு திடீரென ஒரு கார் விபத்தால் டயானா 1997 ஆம் ஆண்டு உயிர் இழந்தார். டயானா இறக்கும் போது அவருக்கு வயது 36 தான்.

இவர்களுக்கு நிச்சயம் முடிந்த சமயம் டயானாவுக்கு இளவரசர் சார்லஸ் ஒரு போர்டு கார்ரை பரிசளித்துள்ளார். தற்போது அந்த கார் ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலத்தில் அந்த கார் 50,000 யூரோகளுக்கு விற்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 51.4 லட்சம் ஆகும். இந்த காரை ஏலத்தில் வாங்கியது ஒரு தென் அமெரிக்க அருங்காட்சியகம். இந்த கார் முதன்முதலில் 1982 இல் ஏலம் விடப்பட்டது.  இந்த கார் ஏலம் விடப்படுவது இது இரண்டாம் முறையாகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here