இந்தியா ஹேக்கத்தான் 2020 (Software) போட்டியின், மாபெரும் இறுதிச்சுற்று,இன்று முதல் வரும் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது, அதுகுறித்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் :
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் இன்று முதல் நாடுமுழுவதும் தொடங்க உள்ளது, இந்த போட்டிகள் வரும் 3 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த போட்டியின் காணொளி வாயிலாக பிரதமர் உரை நிகழ்த்தினார். தமிழில் வணக்கம் என்று தெரிவித்து கோவையை சேர்ந்த மாணவியிடம் இருந்து தனது உரையை நிகழ்த்த ஆரம்பித்தார்.
ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறைகள் – முழு விபரங்கள் இதோ!!
இந்த ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த ஆண்டு, மத்திய அரசின் 37 துறைகள், 17 மாநில அரசுகள் மற்றும் 20 தொழில் நிறுவனங்களின் சார்பில் வரப்பெற்ற 243 கண்டுபிடிப்புகளில், 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிடுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவருக்கு முதல் இடம் 1,00,000 என்றும், ரெண்டாம் இடத்திற்கு ரூ.75,000 என்றும் மூன்றாம் இடத்திற்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பேசியதாவது:
பிரதமர் தனது உரையில் பேசியதாவது ” இளைஞர்கள் எப்படி சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். கோவை மாணவி தயாரித்துள்ள தொழில் நுட்பம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். நமது இலக்கு கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளை உலக தரத்துக்கு உயர்த்துவதே ஆகும். தற்போது சுகாதார துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், தீர்வுகள் வழங்க பட வேண்டும்.