திருக்குறளை புகழ்ந்து பிரதமர் மோடி ட்வீட்..!

0

பிரதமர் மோடி திருக்குறளை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ட்வீட்..!

அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி வரும் பிரதமர் மோடி ட்விட்டரில் திருக்குறளை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது,

மரியாதைக்குரிய திருவள்ளுவரின் வார்த்தைகள் நம்பிக்கையையும் பிரகாசத்தையும் பரப்பும் சக்தியைக் கொண்டுள்ளன.

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் பலரும் இதைப் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கலை & அறிவியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு!!

பிரதமர் மோடி அடிக்கடி தனது பேச்சின்போது திருக்குறளை மேற்கோள் காட்டுவார். சமீபத்தில் லடாக்கில் ராணுவ வீரர்ககள் இடையே பேசும்போது

‘‘மறமானம் மாண்ட வழிச்செலவு தோற்றம்
எனநான்கே ஏலம் படைக்கு’’ என்ற திருக்குறளை குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here