தொடக்கக்கல்வி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

0

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில் இதனை தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

தொடக்க கல்வி:

தமிழகத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடத்த முடிவு செய்தனர். தற்போது இதற்கு தடை விதிக்க கூறி, மதுரை உயர் நீதிமன்றத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகநாதன் வழக்கு தொடர்ந்தார். அவர் கூறியதாவது, கடந்த 18ம் தேதி அன்று தொடக்க கல்வி இயக்குனர், ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி அந்த கலந்தாய்வு வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முதலில் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும். அதன்பின்பு தான் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். ஆனால் தற்போது பொது இடமாறுதல் கலந்தாய்வை நடத்தாமல், பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தவுள்ளனர். இதனால் பணியிடங்கள் மாறும் ஆசிரியர்களுக்கு உரிமை பாதிக்கப்படும்.

தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் – இன்று மாலை அட்டவணை வெளியீடு!!

எனவே இதனை தடை செய்ய வேண்டும் என்று மனு அளித்தார். தற்போது இந்த வழக்கு இன்று மதுரை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். இதனை விசாரித்த நீதிபதி கூறியதாவது, தொடக்க கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு கலந்தாய்வை இடைகாலமாக தடை செய்ய உத்தரவிடுகிறேன் என்று கூறினார். மேலும் இந்த வழக்கை வரும் மார்ச் மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here