நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் நேற்று (ஜனவரி 26) குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு நேற்று கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இந்திய சுதந்திர போராட்ட தலைவர்கள், வீரர் வீராங்கனைகளுக்கு மரியாதை செலுத்தினர். மேலும் மாவட்டந்தோறும் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட உயர் அதிகாரிகளை பாராட்டி சான்றிதழ், கேடயம் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது.
அடுத்த 3 நாட்களுக்கு சூறாவளி காற்று.., இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!
இதை தொடர்ந்து மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி கொடுத்த டாஸ்மாக் நிர்வாகத்தையும் பாராட்டி சான்றிதழ் போன்ற பரிசுகளை கரூர் மாவட்ட நிர்வாகம் வழங்கியது. இதனால் குடியரசு விழாவில் குடிபோதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? என சமூக வலைத்தளங்களில் சர்ச்சை வெடித்துள்ளது.