கடல் உணவுகளில் இறாலுக்கு அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. புரத சத்துக்கள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு நல்லது. தற்போது இந்த இறாலை வைத்து மஞ்சூரியன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இறால் – 1/2 கி
முட்டை – 1
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
சோளமாவு – 1/2 தேக்கரண்டி
இடித்த மிளகாய்
எண்ணெய் – தேவையான அளவு
பூண்டு – சிறிது
வெங்காயம் – 2
குடைமிளகாய்
சில்லி சாஸ்
சோயா சாஸ்
தக்காளி சாஸ்
செய்முறை
முதலில் இறாலை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது அதனை தனியாக ஒரு பவுலில் சேர்த்து அதில் முட்டை, மிளகுத்தூள், உப்பு மஞ்சள்தூள், இடித்த மிளகாய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அதில் சிறிது சோளமாவை சேர்த்து நன்கு கலந்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் பின் மேலே கொடுக்கப்பட்ட சாஸை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் பொரிந்து வைத்த இறாலை போட்டு அடிபிடிக்காமல் வதக்கி இறக்கினால் சுவையான இறால் மஞ்சூரியன் தயார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்