நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் அறிமுக நாயகனாக களமிறங்கிய இந்திய அணியின் பிரஷித் கிருஷ்ணா மிக சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணியினர் தற்போது ஒருநாள் தொடரை விளையாடி வருகின்றனர். நேற்று நடந்த இந்த இரு அணிகளுக்குமான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியினர் அசத்தலான வெற்றியை பதிவு செய்து அசத்தினர். இந்த போட்டியில் இந்தியா அணி 66 ரன்கள் வித்யாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் பிரமிப்பாக இருந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதிலும் குறிப்பாக பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு அனைவரையும் மிரள வைத்தது. இவர் நேற்றைய போட்டியின் மூலம் தான் தனது சர்வதேச போட்டியை துவக்கினார். தனது முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியினரை மிரள வைத்தார். இவர் நேற்றைய போட்டியில் 4 விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இவர் கர்நாடக நாட்டை சார்ந்த்தவர். இவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய் ஹசாரே தொடரின் மூலம் ஒரு நாள் தொடர் வாழ்க்கையை துவக்கினார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
மேலும் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சையது முஷ்டாக் அலி கோப்பையில் தனது டி 20 வாழ்க்கையை துவக்கினார். அதுமட்டுமல்லாமல் இவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்காக தனது கால் தடத்தை பதித்தார். நேற்றைய போட்டியில் இந்திய அணியினர் விக்கெட்டை வீழ்த்துவதற்கு திணறும் நேரத்தில் முதல் இரண்டு பெரிய முக்கிய விக்கெட்களை வீழ்த்தியது இவரே. தனது முதல் சர்வதேச போட்டியிலேயே எதிராணியினரை மிரள வைத்ததால் இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகிறது.