இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் வீடுகள் அனைத்தும் குலுங்கிய நிலையில் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர்.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரிதாக சேதம் ஒன்றும் ஏற்படவில்லை. நேபாளத்தில் மட்டும் இதுவரை 3வது முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தால் அதன் சுற்றுவட்டார பகுதிகளான டெல்லி, பீகார், பாட்னா, உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
கர்நாடகாவை போல் தமிழக அரசு பள்ளிகளுக்கும் இது இலவசம்?? வெளியான முக்கிய தகவல்!!