தமிழகத்தில் நாளை ( செவ்வாய்க்கிழமை) முதலிபாளையம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சில மணி நேரம் மின்தடை ஏற்படும் என திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் கூறியுள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில், அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டத்தை தற்போதைய தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அரசு, மின்வாரிய துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் நாளை ( 27.09.22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முதலிபாளையம், பழவஞ்சிபாளையம், நல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
ரயில் பயணிகளுக்கு சர்ப்ரைஸ் – எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பீங்க., இனிமேல் No Problem! நிர்வாகம் அதிரடி!!
அதில், செட்டிபாளையம், ஆர்.வி.இ.நகர், சர்க்கார் பெரியபாளையம், சிட்கோ,கோல்டன் நகர், முதலிபாளையம்,பொன்னாபுரம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கூலிபாளையம், பெட்டிக்கடை, காளிபாளையம், சென்னிமலைபாளையம்,பழவஞ்சிபாளையம், பாலாஜி நகர், அய்யாவு நகர், ரங்கே கவுண்டம்பாளையம், ராக்கியபாளையம், மானூர் செவந்தாம்பாளையம், நல்லூர், சாணார்பாளையம், காளிபாளையம், முத்தணம்பாளையம், விஜயாபுரம், ராக்கியாபாளையம் பிரிவு, பூங்கா நகர் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.