தமிழகத்தில் பராமரிப்புக்கான மின் நிறுத்த நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது. மின்சார வாரியத்தின் இந்த அறிவிப்பில் பராமரிப்பு பணிக்கான மின் நிறுத்தம் செய்யப்படும் நேரம் தற்போது இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மின்சார பராமரிப்பு பணிகளுக்காக தமிழக மின்வாரியம் இணைப்பை துண்டிக்கும். அப்படிப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த கொரோனா காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் சமயம் இந்த மின் நிறுத்தம் மக்களுக்கு மிகப்பெரிய தொந்தரவாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 9 அல்லது 10 மணி முதல் 5 மணி வரை இருந்த மின் நிறுத்த நேரம் இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே பணி அல்லது வகுப்புகள் நடப்பதை கருதி ஏற்கனவே இருந்த மின் நிறுத்தம் நேரம் குறைக்கப்பட்டு இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.இதன் அடிப்படையில் பகல் 12 மணிக்குள் ஏதாவது 2 மணி நேரம் பராமரிப்பு பணிக்கு திட்டமிட்டு இருப்பதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்சார வாரியத்தின் இம்முடிவு வீட்டில் இருந்து பணிபுரிபவர்கள் மட்டுமல்லாது பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!