தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஒத்தி வைப்பு., கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஒத்தி வைப்பு., கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஒத்தி வைப்பு., கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல், பணிநிரவல் உள்ளிட்ட கலந்தாய்வு கூட்டம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,348 பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டதாரி ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நாளை (மே 21) முதல் நடைபெற உள்ளதாக கல்வித்துறை அறிவித்து இருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் பல்வேறு நிர்வாக பணி காரணமாக பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ரூ.2,000 நோட்டுகளை ஒரு நாளைக்கு ரூ.60,000 வரை மாற்றலாம்? டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு?!!!

கலந்தாய்வு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here