பெண்களுக்கான சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் வரை டெபாசிட்.., ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!!

0
பெண்களுக்கான சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் வரை டெபாசிட்.., ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!!
பெண்களுக்கான சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் வரை டெபாசிட்.., ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!!

மத்திய மற்றும் மாநில அரசுகள், ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன், அதனை சிறப்பாகவும் செயல்படுத்தி வருகிறது. இதில், குறிப்பாக அஞ்சலகங்கள் மூலம், செயற்பட்டு வரும் சிறு சேமிப்புத் திட்டத்தின் மூலம், பல்லாயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தை மேலும், ஊக்குவிக்கும் விதமாக, முற்றிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கவே அரசு, ‘மகளிர் மதிப்பு திட்டம்’ என்பதே அறிமுகப்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த திட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனி அக்கவுண்ட்களை, தொடங்கி, ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதற்கு அதிகபட்ச வட்டி தொகையாக 7% வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும், இந்த திட்டத்தில், ஒருவருக்கு எத்தனை அக்கௌன்ட் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

வருடத்திற்கு 3 சிலிண்டர், அரை லிட்டர் பால் இலவசம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

ஆனால், ஒவ்வொரு 3 மாதங்களுக்கு பிறகு தான் புதிய அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும். இதில், டெபாசிட் செய்த தொகை தேவையென்றால், ஓராண்டு முடிந்த பிறகு 40% எடுத்துக் கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. அஞ்சல் துறையின் தாம்பரம் கோட்ட கண்காணிப்பாளர் மேஜர் மனோஜ், இந்த திட்டத்தில் பங்குபெற விரும்பும் பெண்கள் அல்லது குழந்தைகள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் தொடங்கி பயன்பெறலாம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here