இந்திய தபால் துறையில் பல சிறப்பான பலன்களை வழங்கி வரும் கிசான் விகாஷ் பத்ரா அஞ்சலக சேமிப்பு திட்டம் குறித்தான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 6.9 சதவீதம் வரைக்கும் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.
Post Office:
இந்திய அஞ்சல் துறை நாட்டு மக்களுக்காக பல சிறப்பான நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது, வங்கிகளை காட்டிலும் அஞ்சல் துறையில் பல சலுகைகளுடன் கூடுதல் வட்டியும் வழங்குவதால் பலரும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் தான் சேர விரும்புகின்றனர். இதுமட்டுமல்லாமல் அஞ்சல் துறை திட்டங்களின் வட்டி விகிதமும் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது இந்திய அஞ்சல் துறையில் இருக்கும் கிசான் விகாஷ் பத்ரா அஞ்சலக சேமிப்பு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.
இந்த கிசான் விகாஷ் பத்ரா அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 6.9 சதவீதம் என்ற அளவில் கூட்டு வரி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 10 வயது நிரம்பினாலே முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து தனிக்கணக்கு தொடங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிசான் விகாஷ் பத்ரா அஞ்சலக சேமிப்பு திட்டத்தை தொடங்குவதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது. இதனிடையே, 10 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் இந்த திட்டத்தில் இணைய விரும்பினால் அந்த சிறுவரின் பாதுகாவலர் அல்லது பெற்றோரின் பெயரின் கணக்கு துவங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்கும் போது முதலீட்டாளர்கள் கட்டாயமாக குறைந்தபட்ச தொகையாக ரூ.100 செலுத்த வேண்டும். இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் கணக்கு துவங்கிய முதலீட்டாளர் இறந்து விட்டால் அது வரை சேமித்த தொகை அந்த முதலீட்டாளரின் சட்ட வாரிசுக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த முதலீட்டாளரின் கணக்கை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்