மத்திய அரசு கொண்டு வந்த அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டத்தில், இடம்பெற்றுள்ள 5 வருட சேமிப்பு திட்டம் குறித்த மொத்த விவரங்கள் பற்றிய பதிவு, இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருட திட்டம்:
மக்கள் சேமிப்புக்கு பயன்படுத்தும், முதலீட்டு திட்டங்களில் முக்கியமான ஒன்று அஞ்சல் அலுவலகங்கள். அந்த வகையில், குறுகிய காலத்தில் குறைந்த முதலீட்டில், நிரந்தர வருமானம் தரக்கூடிய ஒரு திட்டம் குறித்த தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 5 ஆண்டு திட்டமான இதில், இணைந்துள்ளவர்களுக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80cயில் வரி சலுகை அளிக்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
18 வயதுக்கு மேற்பட்டோர், குழந்தைகள் பெயரில் இணையும் பெற்றோர் ஆகியோர் இத் திட்டத்தில் இணையலாம். திட்டத்தில் மூன்று பேர் வரை இணைந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலம் பயனடையலாம். இதில் குறைந்தபட்ச முதலீடாக ரூபாய் 1000 செலுத்தி, அதனை ஐந்தாண்டு முடிவில் 100-இன் மடங்காக பெறலாம். இந்தத் திட்டத்திற்கு தற்போதைய நிலவரப்படி 6.8% வட்டி தரப்படுகிறது. 5 வருடங்களில் நீங்கள் 4 லட்சம் ரூபாய் பெறலாம்.
அதேபோல் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 14 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். அதனுடைய பலன் உங்களுக்கு வயது முதிர்வு காலத்தில் கிடைக்கும். ஒருவேளை இடையில் நீங்கள், அதிலிருந்து விலக நினைத்தால் வருடத்தை கணக்கில் கொண்டு, முக மதிப்பு மற்றும் வட்டி மட்டுமே உங்களுக்கு வழங்கப்படும். இத்திட்டம் குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ள அருகில் உள்ள அஞ்சலகத்தை உடனே அணுகுங்கள்.