நடப்பாண்டு ஃபார்முலா-1 கார்ப்பந்தயத்தில் எஞ்சின் பாகங்களை உருவாக்குவதற்கு ரெட் புல் உடன், போர்ஷே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
போர்ஷே F1 இல் நுழையவில்லை!!
உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஃபார்முலா-1 கார்பந்தயம் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான கார்பந்தய தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஒவ்வொரு முறையும் 10 முதல் 11 அணிகள் பார்முலா ஒன் பந்தயத்தில் கலந்துகொள்ளும். அதன் படி சென்ற வருடம் நடைபெற்ற ஃபார்முலா-1 போட்டியில் பட்டத்தை ஜெர்மனியை சேர்ந்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் கைப்பற்றினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதுமட்டுமல்லாமல் சிறந்த அணிக்கான வெற்றிப் பட்டத்தை பார்முலா ஒன் பந்தயத்தில் ரெட் புல் (Red Bull Racing) அணி வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு ரெட் புல் அணியுடன் கார் தயாரிப்பில் பல நிறுவனங்கள் இணைத்துள்ளது. அந்த வகையில் ஆடி கார் நிறுவனம் அண்மையில் ரெட் புல்லுடன் கார் தயாரிப்பில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து ரெட் புல்லுடன் சேர்ந்து இம்முறை ரேஸில் சொகுசு கார் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையில் போர்ஷே நிறுவனம் ஈடுபட்டது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைத்ததாக போர்ஷேவை சேர்ந்த வீரர் போர்ஸ் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் ஆடி நிறுவனம், போர்ஷின் ஒப்பந்தம் தோல்வியானாது ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.