சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் கீர்த்தி வீட்டை விட்டு வெளியே சென்றத்துக்கு பிறகு பூவராசிக்கும் கதிருக்கு இடையே இருக்கும் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
பூவே உனக்காக
சன் டிவியில் தொடர்ந்து பல சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் பூவே உனக்காக சீரியல் தான் டாப் ஹிட். பூவரசி, கதிர் ஜோடிக்காகவே இந்த சீரியல் ஹிட் அடித்து வருகிறது. ஏற்கனவே கதிர் கீர்த்தியை காதலித்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக பூவரசியை திருமணம் செய்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. கீர்த்தியை மறக்க முடியாமல், பூவரசி உடன் வாழவும் முடியாமல் தவித்து வந்தார் கதிர்.
ஆனால் கீர்த்தி இவர்களுக்கு தன்னால் தன் தோழி வாழ்க்கை வீணாக கூடாது என்பதற்காக கடலில் விழுந்தது போல காட்டி வீட்டை விட்டு தப்பித்து சென்றார். பூவராசிக்கும் கதிருக்கு குழந்தை பிறந்ததற்கு பிறகு கண்டிப்பாக வருவேன் என்றும் கூறியுள்ளார். தற்போது கதிருக்கு, பூவராசிக்கும் இடையே ரொமான்ஸ் சீன் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கோவிலில் மணி அடிப்பதற்காக பூவரசியை கதிர் தூக்க பின்னணி பாடலுடன் எபிசோடு வெளியானது. ஒருவேளை கீர்த்தி இருந்ததால் தான் இப்படி சேராமல் இருந்து இருப்பார்களோ. எப்பொழுதுமே சீரியலில் ரொமான்ஸ் சீன் வைத்து தான் மக்கள் மத்தியிலேயே பிரபலமாகிறது. அதே போல் பூவே உனக்காக சீரியலிலும் ரொமான்ஸ் சீன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.