சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் தற்போது கீர்த்தி கடலில் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து கதிர் பூவரசியை சமாதானம் செய்கிறார்.
பூவே உனக்காக
பூவே உனக்காக சீரியலில் தற்போது கீர்த்தி தனது தோழிக்காக கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். ஏற்கனவே ஒரு ஜோசியர் உங்கள் வாழ்வில் என்ன நடந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று வேறு கூறியிருந்தார். இந்நிலையில் கீர்த்தி இப்படி கடலில் விழுந்தது பலருக்கும் ஷாக் தான்.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ செல்வம் தான். ஏனெனில் கீர்த்தி பழைய விஷயத்தை மறந்த சமயத்தில் கீர்த்திக்கு செல்வத்துக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலில் முடிந்தது. இப்பொழுது பழைய நியாபங்கள் அனைத்தும் வந்து விட எதையும் மறக்க முடியாமல் தனது தோழிக்கும் இடைஞ்சலாக இருக்க கூடாது என்பதற்காகவும் இப்படி தற்கொலை செய்துகொண்டார் கீர்த்தி.
ஏற்கனவே இந்த சீரியலில் இருந்து கீர்த்தி விலக போவதாக அதிகப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதாவது தான் மேலும் படிக்க போவதாகவும் அதனால் சீரியலை தொடரமுடியாமல் விலகுவதாகவும் சொல்லி இருந்தார். இந்நிலையில் இப்படி அவர் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சீரியலின் முக்கிய கருத்தே கீர்த்தி பூவராசியின் தோழமை தான். அப்படி இருக்க இந்த கதாபாத்திரத்தை கொன்று விடுவார்களா? அல்லது கீர்த்தி கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை செலக்ட் செய்ய போகிறார்களா? என்பது தெரியவில்லை. கீர்த்தி மறுபடியும் சீரியலில் நடிக்க வேண்டும் என்று பலரும் கதறி வருகின்றனர்.