பூவரசி, கதிருக்கு குழந்தை பிறந்தால் கண்டிப்பா திரும்ப வருவேன்’ – கண்ணீருடன் வீட்டை விட்டு வெளியேறும் கீர்த்தி!!

0

சன் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் தற்போது பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் கீர்த்தி உயிருடன் தான் இருக்கிறார் என்று தெரிந்ததும் தான் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியலில் தனது தோழியின் சந்தோஷத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்யும் அளவிற்கு துணிந்துள்ளார் கீர்த்தி. இருவரின் நட்புக்காக தான் பலரும் இந்த சீரியலை பார்ப்பதே. திடீரென ஏற்பட்ட விபத்தால் கீர்த்தி அனைத்தையும் மறந்து விட செல்வத்தை திருமணம் செய்துகொள்கிறார். பழைய நியாபகம் திரும்பியதும் கதிரை மறக்க முடியாமல் தவித்தும் வந்தார். தனது தோழியின் வாழ்க்கை தான் முக்கியம் என்று கடலில் தற்கொலை செய்துக்கொண்டது போல காட்டப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் கீர்த்தி நிஜமாக தற்கொலையும் செய்துகொள்ளவில்லை. இப்படி நாடகமாடினால் தான் தன்னை தேட மாட்டார்கள் என்று நினைத்து இவ்வாறு செய்துள்ளார். இப்போதைக்கு தான் திரும்பி வர மாட்டேன் என்றும் பூவரசிக்கும், கதிருக்கு குழந்தை பிறந்தால் கண்டிப்பாக பார்க்க வருவேன் என்றும் கூறியிருந்தார் கீர்த்தி. இதை வைத்து பார்த்தால் கீர்த்தியின் கதாபாத்திரம் தொடர தான் செய்யும். ஆனால் அதில் அவர் தான் நடிக்க போகிறாரா?? அல்லது அதற்கு பதில் வேற யாரும் நடிக்க இருக்கிறார்களா?? என்பது தெரியவில்லை.

பாரதி கண்ணம்மா சௌந்தர்யா இளம் வயசுல எப்படி இருக்காங்கனு பாருங்களே – சமந்தாவையே மிஞ்சிட்டீங்க போங்க!!

செல்வம் ஒரு பக்கம் கீர்த்தியை நினைத்து அழுதுகொண்டுள்ளார். மேலும் கதிர் பூவரசியிடம் சண்டையும் போட்டு வருகிறார். இப்படி பல திருப்பங்களுடன் பூவே உனக்காக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் கதிர் பூவரசி ஒன்று பெறுவார்களா?? கீர்த்தி திரும்ப வர வாய்ப்பிருக்கிறதா?? என்பதை அடுத்த எபிசோடில் பொறுத்திருந்து பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here