சன் டிவியில் பூவே உனக்காக சீரியலில் கதிர் தன் தவறை உணர்ந்து திருந்திய வேளையில் தற்போது மறுபடியும் ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார்.
பூவே உனக்காக
பூவே உனக்காக சீரியலில் தற்போது நர்ஸ் கதிரிடம் வந்து டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றி வைத்ததற்கு மஹேஸ்வரி தான் காரணம் என்று சொல்ல கதிர் தான் செய்த தவறை நினைத்து கதறி அழுகிறார்.
கடைசியில் கதிர் தன் குழந்தையையே தான் அழித்து விட்டோமே ஹாஸ்பிடலில் கதறுகிறார். வீட்டிற்கு நேராக வரும் கதிர் மகேஸ்வரியிடம் மிரட்டுகிறார். அநியாயமா இப்படி துரோகம் பண்ணிட்டியே என்று கதறுகிறார்.
ஆனால் மகேஸ்வரி எதற்கும் பயப்படுவதாக இல்லை. அடுத்ததாக மஹேஸ்வரி செய்த அட்டூழியங்களை எல்லாம் வீட்டில் சொல்லி கொடுப்பதாக சொல்கிறார். ஆனால் ரத்னவள்ளியை கொலை செய்த பங்கு கதிருக்கு உள்ளது என்பதை மறந்து விட்டார்.
ரூ.18 ஆயிரத்துக்கு ஏலம் போன காணக்கிடைக்காத அரிதான ஆரஞ்சு நிற நத்தை!!!
எப்படியும் அதனை வைத்து தான் கதிரை மகேஸ்வரி மிரட்ட போகிறார். ஏற்கனவே பூவரசிக்கு கதிர் மீது இருந்த எல்லா மரியாதையும் போய்விட்டது. கதிர் தற்போது தான் மனம் திருந்தியுள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் இப்படி ஒரு ட்விஸ்டு இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை.