‘நீ என்ன நம்பலானாலும், உன் குடும்பத்தை நம்பவச்சு கெடுப்பேன்’ – பூவரசியை பழிவாங்க துடிக்கும் கதிர் குடும்பம்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் கதிரை ஹீரோ என்று நினைத்தால் படுவில்லனாக இருக்கிறார். தற்போது பூவரசிக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் குடும்பத்தை அழித்தே தீருவேன் என்று சபதமெடுக்கிறார்.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கதிர் தான் இப்படி புரியாமல் நடந்துகொள்கிறார் என்று நினைத்தால் அவரின் அம்மா அதை விட பெரிய வில்லியாக இருக்கிறார். பூவரசி முன்பாக நல்லவர் போல நாடகமாடிவிட்டு குடும்பத்தை எப்படி பழி வாங்குவது என்று காத்துக்கொண்டுள்ளார்.

ரத்தினவல்லி இவர்கள் குடும்பத்திற்கு ஏதோ ஒரு கெடுதல் செய்ததாகவும் அதற்காக தான் இத்தனை நாட்கள் நல்லவர் போல நடித்து கதிர் இங்கு இருந்ததாகவும் சொல்கிறார். இந்த விஷயம் கீர்த்திக்கு தெரியுமா?? என்பது தெரியவில்லை. கீர்த்தி வந்தால் மட்டுமே எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பூவரசிக்கு ஆக்சிடன்ட் ஆகி விடுகிறது. வயிற்றில் குழந்தை வேறு உள்ளதால் அனைவரும் பயப்படுகின்றனர்.

150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – மத்திய சுகாதாரத்துறை அதிரடி!!

இது கதிருக்கு சந்தோசமாக தான் உள்ளது. என்னால் தான் பூவரசிக்கு இப்படி ஒரு நிலைமை என்று வெளியில் நாடகமாடுகிறார். அதன் பிறகு நீ என்ன நம்பலைனாலும் வீட்டுல இருக்கவங்ககிட்ட நடிச்சு உன் குடும்பத்தை அழிப்பேன்டி ஏனென்று வக்கிரமாக பேசுகிறார். இனி பூவரசி நிலைமை என்ன ஆக போகிறது என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here