பூவரசியை சந்தேகப்படுறது உன் அம்மாவை சந்தேகப்படுறதுக்கு சமம் – வெளுத்து வாங்கும் கதிரின் அம்மா!!

0

பூவே உனக்காக சீரியலில் தொடர்ந்து பூவரசி கதிருடன் வாழ மாட்டேன் என்று வீம்பு செய்து வந்தார். இந்நிலையில் தற்போது கதிரின் அம்மா எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வருகிறார். பூவரசிக்கு ஆதரவாக இருப்பாரா?? என்ன நடக்க போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியலில் கதிர் வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று ஆடம் பிடித்து வந்தார். பூவரசி சொன்னால் கண்டிப்பாக சாப்பிடுவார் என்று பூவரசியிடம் சென்று கேட்க ஆனால் அவரோ எதையுமே காதில் வாங்குவதாக இல்லை. தன்னால் குழந்தையை தனியாக வளர்த்துக்கொள்ள முடியும் என்று வீம்பு பிடிக்கிறார். இதனை ரத்தினவள்ளியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தன்னை போலவே தன் மகளும் ஆகிவிடுவாளோ என்று பயப்படுகிறார். இதனை பூவரசியால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. பூவரசியின் மாமியார் வந்தால் தான் சரியாக இருக்கும் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைக்கின்றனர். இன்றைய எபிசோடே அதனை வைத்து தான். என்னவென்றால் கதிரின் அம்மா பூவரசியின் வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது பூவரசியை ரத்தினவள்ளி அடித்துக்கொண்டிருக்க கதிரின் அம்மா நிறுத்த சொல்கிறார்.

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

பூவரசியிடம் நடந்தவற்றை கேட்கிறார். கதிர் தன் நடத்தையின் மீது சதேகப்படுவதாக சொல்கிறார். இதனால் அதிரமடையும் அவர் கதிரை பளார் பளார் என அறைகிறார். கடவுளே வந்து சொல்லி இருந்தாலும் பூவரசியை நீ சந்தேகப்பட்டிருக்க கூடாது. அது நீ என்னையே சந்தேகப்பட்டதுக்கு சமம் என்று கூறுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை வைத்து பார்க்கும்போது பல சம்பவங்கள் நமக்காக காத்துக்கொண்டுள்ளது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here