சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் தற்போது கதிருக்கு எல்லா உண்மையும் தெரியவருகிறது. உண்மை தெரியாமல் எடுத்த தவறான முடிவை நினைத்து கதறுகிறார்.
பூவே உனக்காக
பூவே உனக்காக சீரியலில் தற்போது எதிர்ப்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. பூவரசியின் மீது கொஞ்சம் கொஞ்சமாக கோவம் குறைந்து அந்த வயிற்றில் வளரும் குழந்தையை மட்டும் அழித்து விடலாம் என்று யோசிக்கின்றார்.
இதனால் வீட்டில் அனைவரிடமும் நல்லவர் போல நடிக்கிறார். கடைசியில் பூவரசியை கடத்தி மயக்கமடைய செய்து ஹாஸ்பிடலில் சேர்கிறார். அதாவது கருவை கலைத்து விட்டால் கண்டிப்பாக சேர்ந்து வாழலாம் என்றும் சொல்கிறார்.
கடைசி நேரத்தில் தான் அந்த நர்ஸ் கதிரிடம் பூவரசியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீங்க தான் காரணம் என்று சொல்ல பதறி அடித்து ஓடுகிறார். டாக்டர்கள் கையை விரிக்க கதிர் தன் குழந்தையையே கொன்று விட்டோமே என்று கதறுகிறார்.
ஆனால் ப்ரோமோவை வைத்து பார்க்கும்போது கரு கலைக்கவில்லை என்று தான் தெரிகிறது. மேலும் மக்கள் மத்தியிலும் இந்த சீரியலுக்கு ஆர்வம் அதிகரித்தும் வருகிறது. இதனால் தான் மக்களுக்கு விருப்பமான சீரியலாக மாறி வருகிறது.