‘பூவே உனக்காக’ சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய கதிர் – இதுதான் காரணமா??

0

பூவே உனக்காக சீரியல் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் நாயகனாக நடிக்கும் கதிர் இந்த சீரியலில் இருந்து விலகுகிறார். இதனால் பலரும் கவலையில் உள்ளனர்.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியல் ஆரம்பித்து சில நாட்களே இருந்தாலும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. கதிர் பூவரசி ஜோடிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. மேலும் இந்த சீரியலில் நட்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பூவரசி கீர்த்தியின் நடிப்பும் இருந்தது.

இப்படி இருக்க கீர்த்தி இந்த சீரியலை விட்டு விலகியதும் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. தோழி சென்ற சோகத்தில் பூவரசியும், தன் காதலி சென்ற கவலையில் கதிரும் இருக்க பூவரசிக்கும், கதிருக்கும் நெருக்கம் அதிகரித்தது.

மேலும் பூவரசி கர்ப்பமான பிறகு கதையின் ட்ராக் மாறியது. பூவரசியின் அம்மா இறப்பு, கதிர் அம்மாவின் பழி வாங்கும் குணம் என அனைத்தும் மக்களை முகம் சுளிக்க வைத்தது.

நன்றாக போய்க்கொண்டிருந்த சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா என பலரும் இந்த சீரியலை வெறுக்க தான் ஆரம்பித்தனர். இப்படி இருக்க இந்த சீரியலை விட்டு அதிரடியாக விலகியுள்ளார் கதிர். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தும் உள்ளார். இதனால் பலரும் சோகத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here