இந்திய சினிமாவின் பிரமாண்ட படமான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் நடித்த நடிகர்களின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன்:
தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான் . மணிரத்னம் இயக்கிய இப்படம் வருகிற செப் 30 தேதி வெளியாக இருக்கிறது. தற்போது ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இவ்வளவு பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பதற்கு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விக்ரம் இப்படத்தில் நடிப்பதற்கு கிட்டத்தட்ட 12 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அதற்கடுத்து நடிகை ஐஸ்வர்யா ராய் ரூ 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
இன்ஸ்டாவில் வந்த புத்தம் புது அப்டேட் – இதுக்கு தாம்பா ரொம்ப நாளா Waiting! குஷியில் பயனர்கள்!!
இப்படத்தில் லீடு கேரக்டரில் நடித்த ஜெயம் ரவி மற்றவர்களை விட சம்பளம் அதிகமாக வாங்கியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் அவர் விக்ரம், ஐஸ்வர்யா விட குறைந்த சம்பளத்தையே வாங்கியுள்ளார். அதாவது அவருக்கு வெறும் ரூ 8 கோடி தான் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் 5 கோடியும், நடிகை திரிஷாவுக்கு 2.5 கோடியும், ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரூ. 1.5 கோடியும் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு 1 கோடியும் சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது.