என்னது “பொன்னியின் செல்வன்” தமிழ் படம் இல்லையா? சர்ச்சையில் சிக்கிய சுஹாசினி!!

0
என்னது
என்னது "பொன்னியின் செல்வன்" தமிழ் படம் இல்லையா? சர்ச்சையில் சிக்கிய சுஹாசினி!!

இன்னும் சில தினங்களில் திரைக்கு வர உள்ள பொன்னியின் செல்வன் தெலுங்கு மக்களின் படம் என கூறி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளார் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி.

பொன்னியின் செல்வன்:

சோழர்களின் வரலாற்றை கூறும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை, தனது விடா முயற்சியால் மிகவும் பிரமாண்டமாக இயக்கி உள்ளார், இயக்குனர் மணிரத்னம். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. மேலும் இப்படம் ஏற்கனவே திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் குழுவினர் புரொமோஷனில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அந்த வகையில் ஐதராபாத்தில் நடந்த பொன்னியின் செல்வன் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி, பொன்னியின் செல்வன் திரைக்கதை தமிழ் என்றாலும் இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தான் அதிக நாட்கள் நடந்தது. ஆகவே இது உங்களின் படம், நீங்கள் படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி இவர் பேசியது, தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்துக்கே செக் வைத்த முன்னணி இயக்குனர் திரைப்படம்.., வெளியான மாஸ் அப்டேட்!!

நடிகை சுஹாசினி பேசிய வீடியோவை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இணையத்தில் பதிவிட்டு, கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் தமிழர் வரலாற்றை சொல்லும் பொன்னியின் செல்வன் படம் எப்படி தெலுங்கர்களின் படம் ஆகும் என பலரும் கொந்தளித்துள்ளனர். மேலும் சுஹாசினி பேசியது குறித்து, இணையத்தில் “தவளை தன் வாயால் கெடும்” என விமர்சித்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here