சூடு பிடிக்கும் பொன்னியின் செல்வன் பட ப்ரமோஷன்.., வெளியான  சூப்பர்  அப்டேட்!!

0
பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன்:

பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு  இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 1ன் படப்பிடிப்பு முடிவடைந்து, வருகிற செப் 31ல் திரைகாண இருக்கிறது. மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி போன்ற நடிகர்கள்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக அரங்கேறியது.

இந்நிலையில் சினிமா பிரபலங்கள், ரசிக பெருமக்கள் அனைவரும் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படம் வெளியாக குறைந்த நாட்களே இருக்கும் பட்சத்தில், படக்குழுவினர் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சென்னை, தஞ்சை, பெங்களூர், கொச்சி, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் துபாய் போன்ற இடங்களுக்கு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here