பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகர் ஜெயம் ரவிக்கு தங்கையாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் ஜெயம் ரவி
தமிழ் சினிமா துறை மட்டுமின்றி தெலுங்கு திரைத்துறையில் தனக்கு என்று ஒரு தனி இடத்தினை பிடித்தவர் தான், நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த பொது முடக்க காலத்தில் கூட அவர் ஒரு சில முக்கியமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே போல் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக பார்க்கப்படுபவர் தான், நடிகர் ஜெயம் ரவி. இவர் தற்போது இயக்குனர் மணி ரத்தினம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். எழுத்தாளர் கல்கியின் மிக முக்கியமான சரித்திர காவியம் தான், “பொன்னியின் செல்வன்”
சிவக்குமார் மடியில் விஜய், சூர்யா – அப்போவே என்ன ஒரு நட்பு! புல்லரித்து போன ரசிகர்கள்!!
இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மட்டுமின்றி விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா உட்பட பலரும் நடித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் தான் நடிகர் ஜெயம் ரவி நடிக்கிறார் என்ற செய்தி நாம் அனைவரும் அறிந்ததே.
இந்த கதாபாத்திரம் தான் அந்த கதையின் நாயகன். இப்படியாக இருக்க, இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இந்த கதாபாத்திரம் அருள்மொழி வர்மனின் தங்கை கதாபாத்திரம் ஆகும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்து படக்குழுவினர் கூறுகையில் இது தவறான தகவல் என்று தெரிவித்துள்ளனர். அதே போல் இந்த செய்தியினை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.