இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும், பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
மிகப்பெரிய சாதனை:
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. லைகா புரொடக்ஷன் தயாரிப்பில், 500 கோடி பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள, இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில், இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் 125 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் சாட்டிலைட் உரிமையும், பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, ஒரு படம் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சாதனை என திரைவிமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.