தற்போது திரையுலகமே காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் தான். பிரமாண்டமாக எடுத்துள்ள படத்தின் முதல் பாகம் வருகிற செப் 30 தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்திற்கான புரொமோஷன் பணிகள் படு ஜோராக நடந்து வருகிறது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம் பிரபு, மணிரத்னம், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த வகையில் தற்போது பெங்களூர், சென்னை, கொச்சி போன்ற இடங்களில் படத்தை புரொமோஷன் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு படப்பிடிப்பின் போது வசனத்தை மறந்த கதையை வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது இப்படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது, அதிகமான காட்சிகள் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விக்ரமுடன் தான் இருந்தது.
மீண்டும் மோசமான பாரதிராஜா உடல்நிலை – மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு தெரியுமா?
அப்போது அவருடன் நடிக்கும் போது , அவரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் நின்றேன். அதனால் என்னுடைய வசனத்தையே என்னால் பேச முடியவில்லை. மேலும் இப்படத்தில் நடித்த எல்லாருடைய நடிப்பை பார்த்து வியந்தேன் என்று நடித்தார் விக்ரம் பிரபு கூறினார்.