பொன்னியின் செல்வன், படத்தின் ஆடியோ லாஞ்சில் நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வை குறிப்பிட்டு, இந்திய சினிமாவில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை என ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரசிகர்கள் நெகிழ்ச்சி:
மணிரத்தினம் இயக்கத்தில், நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதை அடுத்து, படத்தின் இறுதி கட்ட பிரமோஷன் பணிகளில் பட குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்ற, படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த விழாவில் பேசிய நடிகர் விக்ரம், சோழர்கள் கட்டிய தஞ்சை பெரிய கோயில் பற்றி ஆங்கிலத்தில், மிகப்பெருமையான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதைப் பார்த்த ரசிகர்கள், ஆடியோ லாஞ்சில் எல்லோரும் தங்கள் நடிப்பை பற்றியும், படத்தின் பெருமையைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.
பாட்டியான நடிகை காஜல் அகர்வால் – இந்த டுவிஸ்ட நாங்க கனவுல கூட நினைக்கல! எல்லாமே புதுசு பா!!
ஆனால் நடிகர் விக்ரம், தமிழர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளார். இப்படி நடப்பது இந்திய சினிமாவில் இதுவே முதல் முறை. எனவே இது, உலகின் மிகச் சிறந்த விளம்பர படம் என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் பொன்னியின் செல்வன் படம் இப்போதே ஜெயித்து விட்டது, நாங்கள் அனைவரும் அதற்கு சப்போர்ட் செய்வோம் என ரசிகர்கள் உறுதி தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழு நெகிழ்ச்சி அடைந்துள்ளது.
#AdithaKarikalan @chiyaan explains the history of Thanjavur Temple.#PS1 #PonniyinSelvan1 @sooriaruna @Kalaiazhagan15 @proyuvraaj @mugeshsharmaa pic.twitter.com/pdf1CfLCfm
— Chiyaan Vikram Fans (@chiyaanCVF) September 24, 2022