சமீபத்தில் வெளியாகி வரலாறு காணாத சாதனை படைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன்:
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார். இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் நடித்த ஜெயம் ரவி, விக்ரம், கார்த்திக், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா, த்ரிஷா ஆகியோர் தங்களது தங்களது கதாபாத்திரத்தில் தத்துரூபமாக நடித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இக்கதைக்கு ஏற்ப ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தது இப்படத்துக்கு கூடுதல் வெற்றியை தந்தது. குறிப்பாக இந்த திரைப்படம் இதுவரை எந்த தமிழ் படமும் படைக்காத வசூல் சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து ஒரு அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது இப்படத்தில் இடம்பெற்ற “அலை கடல்” பாடலின் வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் படு குஷியில் இருந்து வருகிறார்கள். மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.